tag:blogger.com,1999:blog-332722972024-03-08T06:06:32.318-08:00நீலாவணன்- NEELAAVANANஈழத்துக் கவிதையாளர் நீலாவணனின் படைப்புகள்Unknownnoreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-33272297.post-81232452304080395872011-11-15T22:38:00.000-08:002011-11-15T22:40:01.908-08:00நீலாவணன் நினைவாக - எம் ஏ.நுஹ்மான்நீலாவணன் நினைவாக<br /><br />உன்னிடம் வருகையில்<br />நான் ஒரு சிறுவன்<br />கண் விடுக்காத பூனைக் குட்டிபோல்<br />உலகம் அறியா ஒரு பாலகனாய்<br />உன்னிடம் வந்தேன்.<br /><br />நீ உன் கவிதை மாளிகை வாசலை<br />எனது கண் எதிர் திறந்து காட்டினாய்<br />நீலாவணையின் கடற்கரை மணலில்<br />நீ உன் கவிதை வீணையை மீட்டினாய்...<br /><br />ஓ, என் கவிஞனே,<br />உனது கவிதை மாளிகை வாசலும்<br />உனது கவிதை வீணையின் நாதமும்<br />எனது நெஞ்சினை அதிர வைத்தன.<br />எனது நெஞ்சின் எங்கோ மூலையில்<br />மூடுண்டிருந்தத கவிதையின் ஊற்று<br />அந்த அதிர்வினால் திறந்து கொண்டது.<br />உனது இசையில், என் கவிதையின் ஆன்மா<br />உயிர்பெற் றெழுந்தது.<br /><br />ஓ, என் கவிஞனே,<br />நீயே என்னைக் கவிஞனும் ஆக்கினாய்<br />நீயே என்னை உயிர்பெறச் செய்தாய்<br />உன்கவி வனத்தில்<br />இந்த இளங்குயில்<br />நீண்ட காலமாய்ப் பாடித்திரிந்தது.<br /><br />காலம் நமது கவிதை வானிலே<br />இருண்ட முகில்களைக் கொண்டுவந்தது<br />காலம் நமது உறவின் பரிதியை<br />இருண்ட முகில்களால் மூடி மறைத்தது.<br /><br />ஓ, என் கவிஞனே,<br />நமது உறவின் பரிதியை மறைத்த<br />கருமுகில் கும்பலைச் சிதறி அடிக்க<br />நீ ஏன் உனது சூறாவளியினை<br />அனுப்பவே இல்லை.<br />நீயோ உனது சூறாவளியினை<br />அனுப்பவே இல்லையே.<br /><br />நமது பாதை பிரிந்தது தோழா<br />நானோ புதிய செஞ்சூரியனின்<br />திசையினை நோக்கிப் பயணம் தொடங்கினேன்<br />நீயும்ஒருநாள் என்னுடன் அந்தத்<br />திசையினில் வருவாய் என்றும் நம்பினேன்.<br /><br />ஆ! என் கவிஞனே,<br />அனைத்தும் முடிந்தது.<br />நீயோ உனது நெடும் பயணத்தை<br />எதிர்பாராத வகையிலே இன்று<br />முடித்துக் கொண்டதாய் தந்தி கிடைத்தது.<br />துடித்துக் கொண்டதென் நெஞ்சு.<br /><br />தொலைவிலே, நீலாவணையின்<br />கடற்கரைக் காற்றில்<br />ஓயாத உன்கவிதை<br />ஒலிப்பதனைக் கேட்பேன் நான்.<br />'மண்ணிடை இரவுக்<br />கன்னியின் ஆட்சி<br />இன்னும் தேயவில்லை இளம்<br />தென்னையின் ஓலைகள்<br />பண்ணிய இன்பப்<br />பாட்டுகள் ஓயவில்லை...'<br /><br />ஓயாத உன்இதயம் ஓய்ந்ததுவாம்<br />ஆனாலும்<br />ஓயாத உன்கவிதை<br />ஒலிப்பதினைக் கேட்பேன் நான்.<br /><br />உனது சடலம் சிதையிலே எரிவதை<br />அன்றேல் அதுஓர் குழியுள் புதைவதைக்<br />காண்பதற்காக நான் வரவில்லை...<br />இதுவே உனக்குஎன் இறுதி அஞ்சலி.<br /><br />எனது துயரையும், பெருமூச்சினையும்<br />உனது நினைவின் சமாதியின் மீது<br />சமர்ப்பணம் செய்கிறேன்<br />சாந்திகொள் அன்பனே!<br /><br />12-01-1975Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-33265859462858994102010-01-22T05:27:00.000-08:002010-01-22T05:28:08.142-08:00ஓவியம் ஒன்று!என்னடியைத் தொட்டெடுத்தான்<br />தன்மடியில் இணைத்தான்<br />இரவெல்லாம் விழிமழையின்<br />அருவியினிலே நனைந்தான்!<br />கன்னமலர் கொண்டொற்றி<br />ஈரமெல்லாம் துடைத்தான்<br />கனவின் இழை தனில்நினைவின்<br />சரமொன்று தொடுத்தான்! <br /><br /><br />தன்னிதழால் ஏந்தியதைச் <br />சூடிஇடை பறித்தான்<br />தமிழ்க்கவியில் பிழிந்தெடுத்த <br />சுவைத்துளிகள் தெளித்தான்<br />என்னசுகம் மெய்ம்மறந்தேன்<br />என்றாலும் மறுத்தேன்<br />இரவுகுழல் நரைத்ததை<br />இருவருமே வெறுத்தோம்! <br /><br /><br />வானஅரை வட்டத்து <br />மையத்தின் முகட்டில் <br />வயங்குமதிக் கலசத்தில் <br />மதுரமதுத் தளும்பும் <br />மானமிழந்தான், மிகவும்<br />மாந்தியதில் புதைந்தான்!<br />மயங்கி, இசை நரம்புகளை <br />வருடிஎனைத் ததைந்தான்! <br /><br /><br />கானநதிச் சங்கமத்தில் <br />மீனெனவே குறித்தான்<br />கரங்களிலே அலையள்ளிப் <br />பெருந்தாகம் தணித்தான்!<br />நாணமெனும் செந்திரைக்குள்<br />நானொளிந்தேன்! விழித்தால்...<br />நாளொன்று புலர்ந்ததடி <br />நாமதனைச் சபித்தோம்! <br /><br /><br />சிப்பியொன்றைச் சிமிழாக்கி<br />முத்துகளை அரைத்தான்<br />சிவப்புவண்ணக் குழம்புசெய்தான்<br />தூரிகையைத் துவைத்தான்!<br />அப்பியப்பி அழித்தழித்து <br />அழுந்தஅதைப் பதித்தான்!<br />‘அருமையிது’ எனஅவனே <br />தனையிழந்து ரசித்தான்! <br /><br /><br />எப்படியான் இனியும் எனை <br />ஒளித்தல்தகும்? இசைந்தேன்!<br />இயன்றவரை உதவிபல <br />புரிந்தவனைப் புகழ்ந்தேன்!<br />அப்பொழுதும் புலர்ந்ததடி<br />நாமதனைத் துதித்தோம்<br />அவன்படைத்த ஓவியத்தை<br />நயந்துமிகக் களித்தோம்!Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-33272297.post-29485718670353925472010-01-22T05:26:00.000-08:002010-01-22T05:27:02.098-08:00கொஞ்ச வந்தான்கொஞ்ச வந்தான்! குனிந்தேன்! அஞ்சிக் <br />கொஞ்சம் பின்வாங்கி நின்றான் <br />கொஞ்ச வந்தான் பிறகும் தடுத்தேன்விழி <br />கும்பிடவும்<br />கெஞ்சி நின்றான்! பணிந்தான்! நகைத்தான்<br />சற்று கிட்டவந்தான் <br />கொஞ்ச வந்தான்! குனியாது நின்றேன் அவன் <br />கொள்கை வென்றான்! <br /><br /><br />மீட்டுகின்றேன், நின் இதயத்து வீணையை<br />மெல்ல மெல்ல <br />கேட்டு கின்றான்! மறுத்தேன்! கடைக்<br />கண்களினால் கிளறி <br />மீட்டும் வந்தான்! எனைப் பாட்டுரைத் தான்!<br />அவன் மென்மையிலே <br />பூட்டவிழ்ந்தேன்! கரும் பூட்டிச் சென்றான், <br />பின்னர்<br />போய்த் துயின்றேன்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-85805404734716710222010-01-22T05:15:00.000-08:002010-01-22T05:18:11.884-08:00இரவு வருகின்றதுஇரவு வருகின்றதே - இளைய <br />இரவு வருகின்றதே <br />உருவி உயிர் பருகும்<br />அரவம் என நெடிய <br />இரவு வருகின்றதே! <br /><br /><br />இமைகள் செயலொழிய <br />இதய அலைகள் எழ <br />சுமைகள் சுடுதுளியாய்<br />சொரிய.. ஒரு.. கரிய <br />இரவு வருகின்றதே – கரிய <br />இரவு வருகின்றதே <br /><br /><br />முதலில் பலதடவை<br />முடுகி நுகர் சுவைகள் <br />எதனை நினைதல் - விடல்?<br />எதனை விலகுவது..? <br /><br /><br />பதுமை யெனவமரில் <br />படரும் கனவு – மனப் <br />புதரில்.. புதிய தளிர் <br />விரியும்!... சருகுகளாய்<br />உதிர – உடல் குளிர <br />உதிரம் உறை கொடிய <br /><br />இரவு வருகின்றதே நெடிய கரிய கொடிய<br />இரவு வருகின்றதேUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-38167618258788900482010-01-22T05:11:00.000-08:002010-01-22T05:15:22.228-08:00தயவு செய்து சிரியாதேதளிருடலை நெளியாதே<br />தயவுசெய்து சிரியாதே <br />மேலாடை <br />கிழியுமெனின் எறிவாய், என் <br />ஹிருதயமும் அதுபோலா..? <br />நிமிராதே!<br />விழிகணையின் விசையினில் விண்<br />வெளியிலெனை எறியாதே!<br /><br />மறுகாலும்..<br />தளிருடலை நெளியாதே<br />தயவு செய்து சிரியாதே!<br />உபகாரம்? <br /><br /><br />விரல் நுனிகள் சுவையாதே!<br />வெகுளி யெனக் குழையாதே!<br />புயலூடோர் <br />சிறுபடகை நுழையாதே!<br />சுழியில் விழ நகையாதே!<br />சுனையூறல் <br />பருகஎனை அழையாதே!<br />பகடிகளும் மொழியாதே!<br />விதியோடும் <br />பொருதஎனைப் பணியா தே!<br />பொறு... உயிரைத் திருகாதே!<br />உபகாரம்!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-77484668497421581852008-08-21T22:47:00.000-07:002009-03-12T21:30:33.380-07:00கவிதைசனத்துள், மனித குலத்துள் சமைந்து பொதுவாகித்<br />தனித்துப் புவியில் நிலைக்கத் தகுந்த பொருளாகி<br />மனத்தின் அகண்ட வலைக்குள் புகுந்து சிறையாகும்<br />நினைப்பில் குதிர்ந்த தொகுப்பின் விளக்கம் கவியாகும்.<br /><br />கணக்கில் குறித்த இடத்தில் இலக்கம் பிசகாமல்<br />இணக்கப் படுத்தல்.அதைப்போல் இசைத்துத் தெளிவாக<br />மினுக்கி மினுக்கி விதிர்த்து மதர்த்த அழகோடு<br />உணர்ச்சிப் பெருக்கில் நனைத்துப் பிழிந்த கவியாகும்.<br /><br />பழைமை கிடந்த மனதுள் விழுந்து பயிராகி<br />செழுமை நிறைந்து புதுமை குழைந்து விளைவாகி<br />அழகும் பொலிந்து அறமும் புதைந்து கலையாகி<br />இளமைக் கயிற்றில் கனவைத் தொடுத்தல் கவியாகும்.<br /><br />தினகரன் 16.6.63Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-33272297.post-13361753138811736312008-08-18T21:27:00.000-07:002008-08-21T22:45:04.860-07:00துயில்இந்த உலகில்<br />இருந்த சில நாழிகையில்<br />எந்தச் சிறிய உயிரும்<br />என் ஹிம்சையினால்<br />நொந்தறியா...<br />யாருமெனை நொந்ததிலை" என்கின்ற<br />அந்த இனிய நினைவாம்<br />அலங்கிர்தத் <br />தாலாட்டுக் (கு)<br />என்னிதயம் தந்து<br />பழம் பிழைந்த<br />பால் கொஞ்சம் ஊட்டப்பருகி, <br />அதைத் தொடர்ந்து<br />கால் நீட்டிப் போர்த்தேன் <br />என் கம்பளியால்.<br />தாலாட்டில்...<br />மாலாகி என்னை <br />மறந்து துயில்கையில்....<br />வீண் ஒப்பாரி வைத்திங்(கு)<br />உலகத்தைக் கூட்டாதே! <br />அப்பால் நடப்பை அறிவேன்...<br />அதை ரசிக்க<br />இப்பயலை மீண்டும்<br />எழுப்பித் தொலைக்காதே! <br />தப்பாக எண்ணாதே<br />தாழ்ப்பாளைப் பூட்டிவிடு! <br /><br />மேளங்கள் கொட்டி, என்றன்<br />மேட்டிமையைக் காட்டாதே! <br />தாளம் மொழிந்து<br />நடிக்காதே! என் பயண<br />நீளவழிக்கு, நில <br />பாவாடை தூவாதே!<br />ஆழம் அகலம்.....<br />அளந் தெதுவும் பேசாதே!<br />மோனத்தில்<br />உன்னுணர்வை மொண்டு, <br />இதய நெடும் வானத்தில்<br />நீ தீட்டி வைத்திருக்கும்<br />என்னுடைய<br />தீன உருவை<br />முழுதும் வழித் தெடுத்து<br />மீன் விழியில் இட்டு <br />விளக்கேற்றி<br />தொட்டிலில் நம்<br />காவியத்தைப் பாடிக் களி! <br />பின், இயற்கையொடும்<br />சாவியலை எள்ளிச் சிரி!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-24432143675752971782008-08-18T21:23:00.000-07:002008-08-18T21:24:38.237-07:00முருங்கைக்காய்கனநாள் கழிந்தொரு கவிதை சுரந்தது!<br />கோப்பியொன் றடித்தேன்;<br />கொப்பியை விரித்தேன்<br />கூப்பிட்டாள் இவள்?<br />ஏனோ? என்றேன். <br /><br />கறிக்குப் <br />புளியம் பழம்போல றால்<br />வாங்கியிருக்கின்றேன்.<br />அதற்குள் வைத்துக் குழம்பு வைக்க<br />முருங்கைக் காய்தான் ருசியாய் இருக்கும்!<br />ஆதலால்,<br />அதோநம் வாசல் முருங்கையின்<br />உச்சிக் கந்தில்...<br />ஒன்று...இரண்டு....மூன்று,<br />நீண்டு முற்றிய காய்கள்<br />ஒருக்கால்...ஏறி<br />உசுப்பி விடுங்கள்; என்றாள்!<br /><br />மறுக்கலாம்....<br />மீண்டும் இரவுகள் வராவேல்!<br />அதற்காய் இசைந்தேன்;<br />அவள் விருப்பின்படி<br />முருங்கையில் ஏறி, முறிந்து<br />விழுந்தேன்!<br /><br />அந்தோ! வந்த அருங்கவி<br />இந்த அமளிகண் டெங்கோ மறைந்ததே!Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-33272297.post-11392395399567378432008-08-18T21:10:00.000-07:002008-08-18T21:19:10.929-07:00உறவுமரணித்துப்போன எங்கள்<br />மானாகப் போடிப் <br />பெரியப்பா..<br />நீர் ஓர் பெரிய மனிதர் தான்!<br /><br />பெட்டி இழைத்தும்<br />பிரம்பு பின்னல் வேலை செய்தும்<br />வட்டிக் குளத்து வரால் மீன் பிடிக்கக்<br />கரப்புகளும் கட்டி விற்றுக்<br />காலத்தை ஓட்டும் ஒரு கிழவன்<br />என்றே நம்மூர் அறியும்<br />நேற்றுவரை.<br /><br />பத்துநாள் தொட்டுப்<br />பகலிரவாய்ப் பாய்மீதில்<br />வைத்தியமே இன்றி<br />வயிற்றா லடியோடும்<br />சத்தி எடுத்தும் வாய்<br />சன்னீ பிசத்தியும்<br />செத்தும் பிழைத்தும் கிடந்தீர்<br />சுவரோரம்.<br /><br />‘எட்டு நாளாக இரணம் ஏதும்<br />குடலுக்குட் செல்லவில்லை’<br />என உருகி உம்மனைவி வள்ளி<br />புளுங்கல் அரிசவித்த வெந்நீரை<br />அள்ளி உமக்கு பருக்குகையில்<br />நீர்-அவளை<br />ஐம்பது ஆண்டாய்<br />அனுபவித்துக் கொண்டதற்கும்<br />ஒன்பது பிள்ளைகளை உற்பவித்து<br />பெற்றதற்கும்<br />ஈற்றில் உமக்காய்<br />ஊற்றை அளைந்ததற்கும்<br />உம்குறைகள் கேட்டதற்கும் ஈடாக<br />ஓர் வார்த்தை யேனும் இயம்பாமல்<br />போய் விட்டீராமே<br />புலம்புகிறாள் வள்ளியம்மை.<br /><br />நாய்படாப் பாடுமது<br />நோயிலவள் பட்டதுண்மை<br />என்றாலும் ஓர் வகையில்<br />ஆனந்தம் வள்ளிக்கு<br />என்ன வென்றால்<br />தன்புருசன் மானாகப் போடிக்கும்<br />எத்தனைபேர் சொந்தம் ! அதோ<br />எக்கவுண்டன் எஞ்சினியர்<br />வைத்திய கலா நிதிகள்<br />வர்த்தகர் பேராசிரியர்<br />சத்தா சமுத்திரந்தான் <br />சாதிசனம்<br />என்பதனால்.<br /><br />தந்தி கிடைத்து<br />மிகநொந்து பட்டு வந்தார்கள்<br />அந்தி வரைக்கும் ஏதும்<br />ஆகாரம் தின்னாமல் <br />குந்தியிருந்து<br />குளறி அழுதார்கள்<br />ஐந்தாறு காரில்<br />இரவே ஊர்போய் விட்டார்.<br /><br />எத்தனைபேர் சுற்ற மிந்த<br />ஏழைக் கிழவனுக்கு<br />இத்தனை நாள் மட்டுமிது<br />யாருக்கும் தெரியாது<br />உண்மையினைக் கண்டெங்கள்<br />ஊர்-விரலை மூக்கில்வைக்கும்<br />வண்ணம் மறைவாக வாழ்ந்தீர்<br />இறவாமல்….<br /><br />இன்னும் உயிரோடே இருந்தீரே யாமாகில்<br />என்ன வகையாய் அறிவோம் உறவினரை<br />செத்தாலும் செத்தீர் நும்<br />செல்வக் குடும்பத்தைப்<br />பத்தியமாய்ப் பார்த்திந்தப்<br />பாரில் வழங்கி வரும்<br />உண்மை உறவறியூம் ஊர்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-25035193705184789802008-08-18T21:03:00.000-07:002008-08-18T21:04:07.105-07:00ஓ..வண்டிக்காரா..ஓ என் அருமை வண்டிக்காரா<br />ஓட்டு வண்டியை ஓட்டு<br />போவோம் புதிய நகரம் நோக்கி<br />பொழுது போமுன் ஓட்டு<br /><br />காவில் பூவில் கழனிகளெங்கும்<br />காதல் தோயும் பாட்டு!<br />நாமும் நமது பயணந் தொலையக்<br />கலந்து கொள்வோம் கூட்டு! - ஓட்டு<br /><br />ஓ என் அருமை வண்டிக்காரா....<br /><br />பனியின் விழிநீர் துயரத் திரையில்<br />பாதை மறையும் முன்னே<br />பிணியில் தேயும் பிறையின் நிழல் நம்<br />பின்னால் தொடரும் முன்னே - ஓட்டு<br /><br />ஓ என் அருமை வண்டிக்காரா<br />ஓட்டு வண்டியை ஓட்டு<br />போவோம் புதிய நகரம் நோக்கி<br />பொழுது போமுன் ஓட்டுUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-23190020704799014452008-08-15T22:08:00.001-07:002008-08-15T22:08:59.060-07:00வெறிக்குதுதங்க நிலாவான் தவழ்ந்து வருகுது – அதில்<br />தாவியே ஏறிட ஆசை பெருகுது!<br />மங்கை உன் அன்பிலென் மனம் உருகுது – தீயில்<br />மாந்தளிர் போலவே உடல் கருகுது!<br /><br />முல்லையில் வண்டினம் மொய்த்துக் கிடக்குது – அந்த <br />மோகக்கிறுக்கிலே ராகம் பிறக்குது!<br />கொல்லையில் குளிர் தென்றல் நடக்குது – அடி<br />கோதை உனைக் கொஞ்ச உள்ளந் துடிக்குது<br /><br />‘அத்தான்’ என்றொரு தத்தை அழைக்குது – ‘வா<br />அன்பே’ என்றதன் சோடி அணைக்குது!<br />ஒத்திய முத்தமோ பித்தம் விளைக்குது – பாவி!<br />உன்நினை வாற்செயல் யாவும் பிழைக்குது<br /><br />நுரைக்கனி யின்விதை நுங்கிற் சுழலுது – அந்த<br />நோக்கிலே என்நெஞ்சு நோயில் உழலுது!<br />வரைக்குமேல் அதோ மதியம் தெரியுது – நீ<br />வராதி ருந்திடில் தேகம் எரியுது!<br /><br />வில்வக் கனிவந்துன் நெஞ்சில் இருந்தது – விழி<br />வேல்பட்ட புண்ணுக்கு வேண்டும் மருந்தது!<br />புல்லி அணைத்திடில் மார்பின் விருந்தது – அதை<br />பூங்கொடி போல் இடைதாங்கி வருந்துது!<br /><br />வன்ன இதழ் எனதெண்ணம் பறிக்குது – அனல்<br />வாகை மலரதன் வண்ணம் குறிக்குது<br />கன்னலின் சாறென இனிமை செறிக்குது – பழங்<br />கள்ளை அருந்திய தென்ன வெறிக்குது!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-57404272423743968222008-08-15T22:07:00.000-07:002008-08-15T22:08:07.526-07:00காதல்இளமையெனும் அகல் விளக்கில்<br />இனியகனா எனுமுயர்ந்த எண்ணெய் வார்த்து<br />பழமையெனும் திரியிட்டு<br />பயனூறும் கற்பனையில் படிய வைத்தேன்<br />அழகெனும் பொருளனைத்தும்<br />அன்பென்னும் சோதிகலந் தன்பு செய்யும்<br />எழில் வாழ்வு காண்பதற்கே<br />எண்ணியெண்ணி ஏங்குகிறேன் எந்த நாளும்!<br /><br />இருளென்ற கரும்பேடு<br />இரவெல்லாம் அடைகாத்து ஈன்ற குஞ்சாம்<br />இரவியெழும் காட்சியிலே<br />என்னிதயம்பறிகொடுத்து எட்டாவானில்<br />மருவியவன் தவழ்கையிலே<br />மணித்தேரை பார்ப்பது போல் மாலை மட்டும்<br />உருகி நின்றேன்!அவனோ என்<br />உளத்திலெழும் அன்பலையை உணர்ந்தானில்லை!<br /><br />காலையிளம் கதிர் கண்டு<br />காத்துவைத்த நாணமெல்லாம் காற்றில் விட்டுச்<br />சோலையிலே சிரித்த புது<br />மலரழகில் உள்ளமெலாம் சொக்கி நின்றேன்!<br />சேலையெனும் இதழுரிந்து<br />சிறைவண்டு நறையுண்டு சென்ற பின்னர்<br />மாலையிலே மடிந்தனவல்<br />லாலெனது மனமறிந்து பழகக் காணேன்!<br /><br />பனிமழையின் சிறுதுளிகள்<br />பட,உலகம் மிகக் களிக்கப் பசும்பொன் பந்தாய்<br />இனிமை நிலா முழுமை நிலா<br />எழுந்ததடா என்னுள்ளத்தில், இன்பம் பொங்கி<br />கனியவரும் அதனுருவி;<br />களங்கமிக இருந்தாலும் காதலித் தேன்!<br />அநியாயம்! என்னுடனே<br />அன்புசெயநிலவுக்கு அறிவே இல்லை!<br /><br />தூசியின்றித் தெளிந் தோடும்<br />துறையினிலே நான்மூழ்கத் தொட்ட தேதோ!<br />பாசியென நினைத்ததனைப்<br />பறித்தெறிய கையாலே பற்றினேனா?<br />கூசியங்கு எதிர்த் துறையில்<br />குளித்த இளங் குமரி எந்தன் கூந்தல் என்றாள்!<br />ஆசையொடும் நான் பார்த்தேன்<br />அவளுமெனை நோக்கி நகை அரும்ப நின்றாள்!<br /><br />காற்றிடையில் குடமேந்திக்<br />கனியிதழில் கள்ளேந்திக் கண்கள் என்று<br />கூற்றிரண்டை ஏந்தியிளங்<br />கொங்கையென நுங்கிரண்டைக் கொடியில் ஏந்தி<br />ஆற்றோடும் அலைந்தென்னை<br />அணைந்த கருங்குழலாட அழகுத் திங்கள்<br />தோற்றோடும் வதனத்தில்<br />தொடர்ந்தோடும் நகையோடும் தோன்றி னாளை…<br /><br />கண்ணிமைத்தேன் தலைகவிழ்ந்தாள்<br />‘கனஅழகுநீ’ என்றேன் கண்ணிரண்டை<br />மண்ணிடையே புதைத்துவிட்டு<br />மலர்ப்பதத்தால் தேடுகிறாள் மாயக்காரி!<br />எண்ணமினி நீயென்றேன்-<br />எனதுயிர் நீர்என்வாழ்வில் சோதி யூட்டும்<br />வண்ண விளக் கெனச் செவியில்<br />வார்த்துவிட்டாள்அமுதத்தை வாழ்க: வாழ்க!<br /><br />இன்பத்தீ பாவளிநாள்<br />இன்றெனது வாழ்வினிலே இனிய நன்நாள்!<br />அன்புத்தீ பரவியிந்த<br />அகிலமெல்லாம் மகிழ்வெய்தும் அருமை நாளே!<br />என் வாழ்வின் சோதியினை<br />ஏற்றி வைத்தாய் இதற்காக எழு பிறப்பும்<br />உன்திரு நாள் கொண்டாடி<br />உளமுருகிப் பாடிடுவேன் உண்மையீது!<br /><br />அன்பெனுமச் செழுங்கழனி<br />அதில்முளைத்த ஒரு கவிதை அழகு கண்டீர்!<br />துன்பமெல்லாம் துடைத்தன்புச்<br />சோதியிலே கலக்கவென்று துடிக்கும் எந்தன்<br />நண்பர்களே! கேட்டீரா<br />நானுரைத்த இவைகளிலே நயமிருப்பின்<br />என்வாழ்வின் சோதியினை<br />எதுவென்று நீரறிவர்! எதற்கு மேலும்?Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-10765911683033758002008-08-15T22:06:00.000-07:002008-08-21T22:21:21.252-07:00போகிறேன் என்றோ சொன்னாய்?மண்ணிடை இரவுக் கன்னியின் ஆட்சி<br />இன்னும் தேயவில்லை - இளம்<br />தென்னையின் ஓலை பண்ணிய இன்பப்<br />பாட்டுக்கள் ஓயவில்லை<br />என்கடை வாயில் உன்னிதழ் ஊட்டிய<br />ஈரம் காயவில்லை – எழில்<br />மின்னிடும் என்றன் மென்முலை தானும்<br />பின்னே சாயவிலை!<br /><br />குறுமணல் மீது கொண்டல் தவழ்ந்த<br />சுவடும் மாறவிலை – அங்கு<br />புறவுகள் வந்து குறுநடை கொண்டு<br />கோலம் கீறவிலை<br />இரவின் ‘அம்மிக் குருவி’கள் இன்னும்<br />இல்லம் சேரவிலை – என்னை<br />இடைவெளி யின்றி இறுக அணைத்த<br />இதமும் தூரவில்லை!<br /><br />பருவப் பெண்ணாம் இரவுக் கன்னி<br />தவறிப் பெற்றபயல் - அந்தப்<br />பரிதிக் குஞ்சைக் ககனத் தெருவின்<br />முடிவில் போட, அவன்<br />உருவப் பொலிவின் உதயத் தொளியில்<br />உறவை வெட்டுகிறாய் - பொல்லா<br />உதிரக் கடலின் நடுவில் படகில்<br />நடையைக் கட்டுகிறாய்!<br /><br />“விண்ணின் தாரை எண்ணிப் பொழுதை<br />வீணாக் கிடவல்ல – அணு<br />விஞ்ஞா னிகள்போல் மண்மேல் உயிர்கள்<br />நீறாக் கிடவல்ல!<br />உண்ணீர் என்றே மீன்கொடு வந்திவ்<br />வுண்ணா உலகத்தின் - பசி<br />ஓட்டப் போகின் றேனென் றோசொன்னாய்”<br />என் உயிரத்தான்!<br /><br />வேம்புக் குமரி தென்றல் காற்றின்<br />வெறியைச் சாடுகிறாள் - அந்த<br />வீம்புக் காரன் விரகப் பேயோ<br />டவளைக் கூடுகிறான்!<br />தேம்பிக் கொண்டே ஆடையை அள்ளி<br />மார்பை மூடுகிறாள் - உன்னைத்<br />தேடித் தேடி ஆழிக் கரையில்<br />ஒருபெண் வாடுகிறாள்!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-4465038132518745682008-08-15T22:05:00.000-07:002009-03-12T21:32:30.090-07:00குமையும் குயில்தோடம் பழச்சுளைபோல் தொங்கும் நிலவொளியில்,<br />ஆட வருவாயென்று, ஆற்றோரம்<br />ஓடத்தே<br />நான்காத் திருந்தேன் நடுச்சாம மாகுமட்டும்,<br />ஏன்காக்க வைத்தாய் எனை?<br /><br />எண்ணத்தில் எல்லாம் எலுமிச்சைப் பூச்சிரிப்பே<br />கண்ணிறையக் காணுவதுன் கட்டழகே,<br />எண்ணில்லா<br />வெள்ளிகளின் மத்தியிலே, வீற்றிருக்கும் வெண்ணிலவை<br />எள்ளி நகைக்கும் எழில்.<br /><br />வெண்டா மரைக்குள்ளே வீழ்ந்துருளும் நீலநிற<br />வண்டாய், விழியாலிவ் வானத்தைக்<br />கண்டாலே<br />என்னை நினைக்கா திருக்க இசைவாயோ?<br />என்னே இதயம் இரும்பு!<br /><br />தக்காளிக் கன்னங்கள் மிக்க சிவப்பேறப்<br />பக்கத் திருந்திசை நீ பாடுங்கால்…<br />துக்கமுற்று<br />சித்தம் குழம்பிச் செயலிழந்து மாமரத்தின்<br />கொத்துள் குமையும் குயில்!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-84295849442277365732008-08-15T22:04:00.000-07:002008-08-15T22:05:07.463-07:00வசந்தம்பச்சையான இலைகளில் பொன்முலாம்<br />பாவ, ஊரின் பசும்புல் வெளியெலாம் ,<br />பச்சைப் பாலகன் போலப், பகற்பயல்<br />பாய்ந்த வெண்பனிப் பந்தடித் தென்னுடை<br />குச்சியுள்ளும் குறும்பு புரிந்தனன்.<br />கோபித் தென்பயன் இந்தப் பழங்கிழம்!<br />‘அச்சாடா’ வென அந்தக் குறும்பனின்<br />அதர மீதிலோர் முத்தம் அளிக்கிறேன்.<br /><br />சன்னலைத் திறந்தேன், நெடுங்காலமாய்ச்<br />சாவை வெல்லத் தொடரும் நெடுவழி<br />அன்ன சாலை யருகொடும் வேலிமேல்<br />அந்த ரத்தினில், தந்தி சொல் கம்பிகள்<br />தொன்மை வாய்ந்தோர் பட்டினம் நோக்கியே<br />தொடுக்கப் பட்டுள தாம்அவை! என்கிறார்!<br />என்னவோ இன்பப் போதையிக் காலையில்!<br />எங்கிருந்திப் புதூஒளி பொங்குது!<br /><br />வம்மி தோறும் வயிரம் வயங்குது<br />வாகைக் கொம்பரில் மாணிக்கக் கொந்துகள்,<br />செம்மை குள்முருங் கீன்ற பவழங்கள்!<br />செல்வ மாங்கிளை முத்தம் சொரிந்திடும்.<br />எம்மருங்கு திரும்பினும் பச்சையில்<br />இடையிடை எழில் புன்னகைத் தேமலர்,<br />அம்மம் மா! என்ன அற்புதம்! ஊரெலாம்<br />அழகி யுன்றன் திருமணப் பந்தல்கள்!<br /><br />பந்தல் தோறும், குயில்வித்து வான்களின்<br />பண்த தும்புசங் கீத விருந்துகள்!<br />குந்திக் காக்கை குரவை யிடும், மரங்<br />கொத்தி, தாளங்கள் கொட்டிக் குதிக்கிறார்!<br />வந்து சேர்ந்தனர் நாட்டியத் தோகையர்,<br />வயல் அரங்குதொ றும்புது நாட்டியம்!<br />இந்த வையம் அனைத்தும் இருந்தன<br />தினிய நண்பர்கள் யாவரும் வந்தனர்.<br /><br />வேனிலே, மண வேளை நெருங்குது,<br />வேதியர் அணில், வேதம் மொழிகிறார்<br />கானி லெங்குமுன் காதலை வாழ்த்தியே<br />கவிதை பாடுகின்றார் கவிவாணர்கள்!<br />வானில், வண்ண இறக்கை புனைந்ததோ<br />வந்து கொண்டிருக்கின்றனர் காதலர்!<br />ஏனடீ இவ் வவசரம்….! நாங்களும்<br />இருக்க… நாணமில் லாது சிரிக்கிறாய்!Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-33272297.post-53867784207017018032008-08-15T22:00:00.002-07:002008-08-15T22:04:05.438-07:00பொங்கல்பச்சைக் களிமண் கொணர்ந்து பிசைந்து பதப்படுத்தி<br />அச்சிற் பதித்தது போல்நீவிர் செய்த அடுப்பினிலே<br />‘அச்சா’ என உங்கள் அத்தான்கள் மெச்சி அகப்பையிலும்<br />மிச்சம் விடாது சுவைக்கும் நறும்பொங்கல் மெத்தவுமே…<br /><br />உண்டு வயிற்றை ஒருசாண் உயரத்திற்(கு) ஊதுவித்து<br />கண்டீர் மயக்கம், கவிதையின் இன்னொலி காதுபட<br />சண்டாள நித்திரை சார்ந்தாலும் சாரும்! சரிசரிஎன்<br />பொண்டாட்டி வைத்த பெரும்பொங்கல் பெற்றியைப் பேசுவமே<br /><br />மண்ணிற் கிடந்து முழுமதி ஒன்றெம் மனைக்குள் எழும்<br />இந்நேரம் மட்டும் இணைந்து கிடந்த இவள் துயிலும்<br />எந்நேர மோபிரித் தேகி, இடைக்கிடை எய்தியங்கு<br />கண்சாடை ஒன்றில் கருத்தைப் புதைத்துக் களிக்கையிலே<br /><br />ஆற்றில் என அன்னம் இறங்க <br />அதுகண்ட அல்லியின் தாள் <br />தோற்றோம் இவள்தன் துடியிடைக் கென்று துவண்டுவிழ<br />நேற்று வரையிலும் நிகழாத விந்தை நிகழ்ந்த தென்று<br />ஆற்றாத செந்தா மரைப் பெண்ணை வண்டு வந்(து) ஆற்றிடுமே.<br /><br />ஆற்று மணலில் அடிமிதிப் பாள்அதை அங்குநிற்கும்<br />நூற்றுக் கதிகம் வயதாம் மருத நுனிக்கிளையில்<br />வீற்றிருக் கின்றஅக் கிள்ளைகள்கண்டு விஷமம் எங்கள் <br />தோற்றத்தை இந்தச் சிறுக்கிதன் காலில் துவைப்பதென்றே –<br /><br />சண்டைக் கிழுக்க இவளும் தன் மூக்கால் சமாளிக்கலாம் <br />வெண்டைக்காய் போன்ற விரலேன் இதற்கு? வெடிகள் எங்கும் <br />சண்டித் தனமே புரியும் இதென்ன சபையறியாப்<br />பன்றிக் குலமோ சரிஒருநாள்தான் பறையட்டுமே.<br /><br />கோலத்தின் நாப்பண் குடம்,அதன்மேலே குவிந்திருந்தால் <br />பாலூறு தெங்கின் பழந்தான்,அதிலெங்கள் பாவையர்கள் <br />மேலாடை மீறி மிதக்கும் இளமுலை மேன்மை, யதன்<br />பாலேது? மேலே பகர்தல் முழுதும் பழங்கதையே.<br /><br />பாலுக்கும் இவள் பல்லுக்கும் முனம்<br />பகையோ தொடர் பழியோ?<br />வேலுக்கும் நெடு வாளுக்கும் அதன்<br />நினைவிற் பயம் இல்லையோ?<br />மேலுக்கும் இனும் மேலுக்கும் எழ<br />வெளியோ? குரல் எரியோ?<br />ஆளுக்கு இனி அடிதான் விழும்<br />அதனால் அவள் பிழையோ?<br /><br />உழுபவர் மனதினில் கதிரது அசைகையில்<br />குதியொடு மகிழ்வது வழியும்<br />உலகினில்உறுபசி<br />விலகியே சிறுமைகள்<br />விடியலில் பனியென ஒழியும்<br />கலைமதி சிதறியே கனலிடை வழிகையில்<br />கதிரவன் முகஎழில் பொலியும்<br />பிழையிலை ஒரு தினம்<br />தொழுதிடல் முறையிதை<br />பெரியவர் மனமிதை அறியும்.<br />உழுபவர் குருதியில் பெயர்வது வியர்வெனும்<br />அரிசியின் அவியலாம் குழைவே!<br />அழுவதும் இலையினி, அருணனின் அருளிது<br />அதுவுமெம் நிலமகள் விளைவே<br /><br />பலபல என அதோ விடியுது பறவைகள்<br />பகர்வதும் பகலவன் துதியே!<br />அழகிது கவிதையும் முடியுது துயில்பவர்<br />அவசர மிலை இனி எழுமே!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-26139068868988942912008-08-15T22:00:00.001-07:002008-08-15T22:00:55.391-07:00கதிர் பொறுக்குகின்றாள்கதிர் பொறுக்குகின்றாள் - வயல்<br />காட்டிலே குனிந்து வள்ளி<br />கதிர் பொறுக்கு கின்றாள்!<br /><br />விதிர் விதிர்க்க வெயிலில் நின்று<br />வினை முடிக்கு முழவர் கண்டு<br />சதிரெனக் களிக்க நன்று<br />சாய்ந்து சாய்ந்து முன் நடந்து….<br /><br />கதிர் பொறுக்குகின்றாள் – வள்ளி<br />கதிர் பொறுக்குகின்றாள்!<br /><br />புல்லறுத்து பாதமோ,<br />வெண் புறாவின் கால் எனச் சிவந்து,<br />நெல் சுமக்கு முழவர் நெஞ்சில்<br />நினைவு கோடி நிறைய நின்று….<br /><br />கதிர் பொறுக்குகின்றாள் – வள்ளி<br />கதிர் பொறுக்குகின்றாள்!<br /><br />சூடிரண்டையே சுமந்து<br />தூரெனும் இடை துவண்டு<br />ஆடுகின்ற தோகை கண்டு<br />அஞ்சி யோட அதனை வென்று…<br /><br />கதிர் பொறுக்குகின்றாள் - வயல்<br />காட்டிலே குனிந்து வள்ளி<br />கதிர் பொறுக்கு கின்றாள்!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-31405541899114370012008-08-15T21:59:00.000-07:002008-08-15T22:00:00.150-07:00பொன்னி வயற்புறம் போவதேன்கன்னி எழிலொடு தன்னந் தனிமையிற்<br />பொன்னி வயற்புறம் போவதேன்? – எங்கள்<br />பொன்னி வயற்புறம் போவதேன்? – அவள்<br />கண்ணை இமைப்பது கண்டு குளத்திடை<br />காவி மலர்க்குலம் சாவதேன் - அந்தக்<br />காவி மலர்க்குலம் சாவதேன்!<br /><br />நஞ்சை விளைப்பவன் நாட்டின் பெருந் திரு<br />நெஞ்சை அரிந்து துண் டாடவோ! – கொண்டு<br />கஞ்சி கொடுத்தபின் காற்றை மறித்தவர்<br />கொஞ்சி மகிழ்ந்து கொண்டாடவோ?<br /><br />கன்னி…<br /><br />முற்றி விளைந்த நெல் பற்றைக்கு நாணத்தை<br />கற்றுக் கொடுத்தபின் மீளவோ? – கரு<br />விற்புரு வத்தினில் அற்புதம் செய்தவன்<br />அன்பு மனத்தினை ஆளவோ……..?<br /><br />கன்னி…<br /><br />இப்படிச் சூட்டை இயற்றுக என்றிரு<br />செப்பு முலைகளைக் காட்டவோ! - இல்லை<br />“எப்படி என்முகம்?”என்றுசெந் தாமரைக்<br />குப்பையை அங்கிருந்தோட்டவோ….?<br /><br />கன்னி…<br /><br />உச்சி வெயிலினைத்துச்சமென் றெண்ணி<br />உழைத்த வரைப் புயம் சாயவோ? – காதல்<br />இச்சை எழுப்பி இதழ்கடை ஊறிய<br />இன்ப அமுதினை ஈயவோ…..?<br /><br />கன்னி…Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-404423969146072012008-08-15T21:57:00.000-07:002008-08-15T21:59:04.575-07:00பாய்விரித்து வையுங்கள்பறையின்மகள் தூங்குகிற<br />அறைக்கதவை நள்ளிரவில்<br />பதுங்கிச் சென்று<br />குறைமதியால் மதுவெறியால்<br />தட்டுகிற கோமான்காள்<br />கொஞ்சம் நில்லீர்!<br />நிறையுடையாள் பொன்றாத<br />கற்பெனும் நிதியுடையாள்<br />நெஞ்சை ஈர்த்தால்<br />முறையாக மணப்பதிலே<br />வசையென்ன? ஏறிடுமோ<br />முதுகில் மேளம்!<br /><br />முடிச்சவிழ்க்கப் போம்பொழுதும்<br />முதலாளி போலுடலை<br />முறையாய் மூடி<br />நடித்துலகை ஏய்ப்பதற்கும்<br />நாகரிக உடைவேண்டும்!<br />அவற்றைக் கல்லில்<br />அடித்தும்மை அழகுசெய்யும்<br />அந்த “வண்ணத்” தோழனுங்கள்<br />அருகில் வந்தால்<br />துடிக்கின்றீர் ஏனையா?<br />சொல்லுங்கள் தொங்கிடுமோ<br />தோளில் மூட்டை!<br /><br />குரங்குக்கும் உங்களுக்கும்<br />கொஞ்சமெனும் உறவில்லை?<br />குறித்துக் காட்ட<br />சிரங்கொட்டும் நும்தலையில்<br />சீழ்கொட்டும் போதுமதைச்<br />சிங்கா ரிக்க<br />கரந்தொட்டே கத்தியினால்<br />“கருக்” கென்று மயிர்சீவிக்<br />காட்டு வாழ்வுக் (கு)<br />இரங்குகின்ற “அம்” பட்டன்<br />ஈனனென்று செப்புகிறீர்<br />இதுவோ நீதி?<br /><br />களிப்புக்கும் உள்ளாழ்ந்த<br />கவலைக்கும் மருந்தென்று<br />கலத்தை நீட்டி<br />புளிப்புக்கும் இனிப்புக்கும்<br />போராட்டம் போடுகிறீர்<br />பொழுது பட்டால்!<br />சுளிக்கின்றீர் ஏதோதோ<br />சுடுசொற்கள் வீசுகிறீர்<br />சொந்த நண்பன்<br />குளிக்கவரின் பொதுக்கிணற்றில்<br />"பள்”ளென்று கூவுவதோ<br />கொடுமை ராசா!<br /><br />கோயிலையும் ஹோட்டலையும்<br />“கொள்கையெனப் பேசிடுவோர்<br />கூடிச் சென்று<br />வாயிலினைத் திறப்பதினால்<br />வந்திடுமோ ஒன்றுகுலம்?<br />வளர்ந்து விட்ட<br />நோயிதனை நொருக்கிவிட<br />நோக்குடையீர் எனிலுங்கள்<br />நொண்டி நெஞ்சில்<br />பாய்விரித்து வையுங்கள்<br />பகுத்தறிவு நல்லெண்ணம்படுத்துத் தூங்க!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-69940838029677178632008-08-15T21:56:00.000-07:002008-08-15T21:57:37.092-07:00காக்கைகள்காக்கைநாம், கரிய<br />காக்கைகள் பெரிய<br />நோக்கமற்ற சிறு காக்கைகள்!<br />கருங்காக்கைகள்!<br /><br />கறுப்புத் துணியைக் காட்டி,<br />அரு வருக்கத் தகுந்த தெங்கள்<br />இறக்கையென் றுணர்த்தியும்<br />எட்டத் துரத்திவிடும் விருப்பத்தில்<br />சிலர்செய்யும் விஷமத் தனத்துக்கும்<br />இரங்குவோம்! உணவருந்துவோம்!<br />பின் பறந்துபோம்….<br /><br />காக்கைநாம், கரிய<br />காக்கைகள் பெரிய<br />நோக்கமற்ற சிறு காக்கைகள்!<br />கருங்காக்கைகள்!<br /><br />உலகத்தின் அழுக்குண்டெம்<br />உடல்கொண்ட ஊத்தையை<br />அலசி அலசி நன்கு<br />கழுவிக் குளித்த பின்னர்<br />அலகில் உணவு கொண்டுள்<br />அறையுள் புகுந்துமக்கள்<br />அணைப்பினில், அன்பின் பிணைப்பினில்<br />இன்பம் சுகித்திடும்….<br /><br />காக்கை நாம், கரிய<br />காக்கைகள் பெரிய<br />நோக்கமற்ற சிறு காக்கைகள்! –<br />கருங்காக்கைகள்!<br /><br />அழுக்கைத்தவிர வையத்<br />தழகை விழுங்குதற்குப்<br />பழக்கப் படாதவர் ஐயநாம் அதற்காக<br />இழக்கமாய்ப் பழித்தெம்மை<br />ஏசித் துரத்தல்விட்டு<br />வழங்குவீர்!அன்பை! விளங்குவீர்!<br />நன்றி மறந்திடாக்…<br /><br />காக்கைநாம், கரிய<br />காக்கைகள் பெரிய<br />நோக்கமற்ற சிறு காக்கைகள்!<br />கருங்காக்கைகள்!<br /><br />உணவிட்டு எமையிட்டும்<br />உருகி இரங்குகிற<br />மனிதத்தின் உயரிய<br />குணம்பற்றிப் பயன்பற்றி<br />மனமொத்தெம் இனமொன்றி<br />மகிழ்ச்சிக் கவியிசைத்தல்<br />இன ஒற்று மைக்குமட்டும் - இலை,<br />அன்பின் நினைவுக்கும்…<br /><br />காக்கைநாம் கரிய<br />காக்கைகள் பெரிய<br />நோக்கமற்ற சிறு காக்கைகள்!<br />கருங்காக்கைகள்!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-63620511572145493392008-08-15T21:53:00.002-07:002008-08-24T23:26:06.294-07:00வேனில்ஆண்டில் ஒருமுறை எம் <br />மாண்ட பிதிர்கடனை<br />வேண்ட வரும் குருக்கள் போலே <br />கிளை<br />நீண்டு வளர்ந்து பச்சை <br />பூண்டு புதுத்தளிர்கள்<br />தோன்றும் மரங்களுக்கு மேலே <br />உயர்<br />பாண்டி மாநகர் <br />தோண்டி எடுத்த தமிழ்<br />ஈண்டு குயிலிரைக்கும், தேனே! <br />அது<br />தீண்ட எனதுளமும் <br />தாண்டும் கவலைகளை<br />மீண்டும் கவிதைவெறி யானேன்!<br /><br />முள்ளு முருக்கில் எரி <br />கொள்ளி நெருப்புதிர்ந்து<br />தள்ளி கிடக்குமோர்மாந் தோப்பை <br />வான்<br />வெள்ளி குலைகுலையாய் <br />அள்ளி எறிந்தது போல்<br />கொள்ளை கொளுத்துது மத் தாப்பை!<br />புள்ளும் குருவிகளும் <br />உள்ளம் கனிந்த காதல்<br />வெள்ளம் தனில் குடைந்தே ஆடும்! <br />புதுக்<br />கள்ளில் எழும் “தெறி” போல் <br />துள்ளும் சுவைக்கவிதை<br />சொல்லி வசந்த மிதைப் பாடும்!<br /><br />செல்வம் படைத்தவர்க்கே <br />ஒல்கும் பணிவிதென்று<br />நெல்லின் கதிர்கள்தலை தாழ்த்தும் <br />மிக<br />மெல்ல நடந்துவரும் <br />செல்வக் குழந்தை இளம்<br />தென்றல் அவைநிலத்தில் வீழ்த்தும்! <br />சுவை<br />வெல்லத் தமிழ் கதைத்து <br />செல்லும் கிளிக்குலமும்<br />வேனில் விளங்கவென வாழ்த்தும் <br />இதை<br />நல்லகவிதை யொன்று <br />சொல்லும் படிக்கெனை எந்<br />நாளும் கனவிடையே ஆழ்த்தும்!<br /><br />சன்னல் அருகுநின்று <br />என்னே அழகிதென்று<br />கண்ணைப் பிசைந்து கொண்டு பார்த்தால் <br />அவள்<br />என்னோ டெழுந்து வந்தென் <br />முன்னால் அணைந்து நின்று <br />தன்மேல் எனதுடலைப் போர்த்தாள் <br />எழில்<br />மின்னும் வசந்தமன்பு <br />பண்ண இயற்கை தந்த<br />வன்னப் பொழு தெனவே சாய்ந்தாள் <br />அவள்<br />கன்னம் சிவக்க இதழ் <br />தன்னைப் பதிக்கையிலே<br />விண் ஏன் இடையில் வந்து பாய்ந்தாள்?Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-54018812535731143432008-08-15T21:53:00.001-07:002008-08-15T21:53:49.837-07:00அத்தான்பொலியும் கலைமதியின் பெயரால் தனையறியார்<br />நலியும் மதி ஒளியில் நலமேதடி கண்டார்?<br />எலியின் உருவதிலும் எழில் காண் பவர் விழிகள்<br />மெலியும் நமதுடலை மேவா ததுமேனோ?<br /><br />வாடும் கரமென்றே வளைசெய் ஒலிகேளா<br />தோடும் முகிலிடையே ஒழுகுங் கவியெனவே<br />தேடும் அவர் விழிகள்! தெரியா நமதுருவம்!<br />கூடும் தினமெண்ணிக் குலையா திருமனமே!<br /><br />கோவைக் கவிதன்னைக் கொத்தும் கிளிகண்டே<br />நாவை நதியாக்கி நாவாய் விடுகின்றார்.<br />காவிற் கலைமானிற் காணும் நவமிந்தப்<br />பாவைக் கிலையென்றோ பாரா முகமானார்?<br /><br />கடல்நா டிடு நதியின் கதையைக் கவிசெய்வார்<br />உடலோ டுயிர்மாய உளமே யவர்நினைவாய்<br />மடல்காய்ந் திடுதாழை மலரா யொருமங்கை<br />நடமா டுவதறியார் நமனா யினரவரே!<br /><br />கண்ணிற் கருவண்டைக் காணார் மலர்மதுவை<br />உண்ணும் அவை கண்டால் உளமீந் திடுகின்றார்<br />எண்ணச் சுடுகாட்டில் எய்தும் சுகமிந்தப்<br />பெண்ணுக் கிலையென்றோ பேசாச் சிலையானார்!<br /><br />கொத்தாய் மலர்சூடிக் குறையா அழகோடு<br />நித்தம் அவர் நினைவாய் நிற்கும் நமைவிட்டே<br />கத்தும் குயிலிசையிற் கவிதைக் கருதேடும்<br />அத்தா னொருபித்தன்! அழியா திருமனமே!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-41731062865540933562008-08-15T21:51:00.000-07:002008-08-15T21:52:59.873-07:00மட்டக்களப்பு மாநகர்இலங்கையின் திருமுகம், இலட்சியத் தமிழகம்<br />எழில்தவழ் மட்டு மாநகர் வாழ்க!<br />வளம்பல கொழிக்கும் வாவியில், மீன்கள்<br />முழங்கிடும் இசையும் தமிழும் வாழ்க!<br /><br />விபுலா னந்தன் வழங்கிய யாழாய்<br />விளங்கிடும் வங்கக் கடலொடும், வாவி<br />நவரச ஏழிசை நரம்பெனப் பொருந்தும்!<br />நாளும் உதயச் செங்கதிர் வணங்கும்!....<br /><br />இலங்கையின் திருமுகம்…..<br /><br />வயல்களில் பொலிமலை! ஆழியில் மீன்கள்!<br />வளர்செழுந் தெங்கும் உதிர்வதுந் தங்கம்!<br />அயல்விருந் தோம்பும் அன்பினில் அன்னை!<br />அரைசியல் பல்கலை அறிஞர்க்கும் அம்மை!.....<br /><br />இலங்கையின் திருமுகம்….<br /><br />சோதிடம், மருந்து, மந்திரம், கூத்து,<br />சுவைக்கவி, வசந்தன் குரவையும் ஏத்தும்,<br />சாதிகள் நான்கும் தம்மதம் காத்து,<br />சமத்துவம் கண்ட தாயகம் வாழ்க!....<br /><br />இலங்கையின் திருமுகம்….Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-61590165999994714412008-08-15T21:49:00.000-07:002008-08-15T21:51:03.834-07:00மழை பொழிந்ததுமழை பொழிந்தது, மழை பொழிந்தது!<br />மண் மடந்தையின் மனங் கசிந்தது!<br />மலையிருந்து பல் நதி விரைந்திட,<br />மரஞ்செடி கொடி மகிழ்ந்து கும்பிட<br /><br />மழை பொழிந்தது, மழை பொழிந்தது!<br />மண் மடந்தையின் மனங் கசிந்தது!<br /><br />கருணை வானக் கரம் வழங்கிய<br />கனிந்த நாவற் பழஞ் சொரிந்தென,<br />பரந்த பூமிச் சருகதிர்ந்திடப்<br />படபடபட சடசடவென…<br /><br />மழை பொழிந்தது, மழை பொழிந்தது!<br />மண் மடந்தையின் மனங் கசிந்தது!<br /><br />தாளங் கொட்டித், தவளைத் தட்டார்<br />தங்க மின்கொடித் தாலி செய்திட,<br />ஆழமான குளம் வழிந்திட,<br />அடியடியென விடியவிடிய….<br /><br />மழை பொழிந்தது, மழை பொழிந்தது!<br />மண் மடந்தையின் மனங் கசிந்தது!<br /><br />கலையிழந்து தம் கணவர் நெஞ்சிடை<br />காதல் வஞ்சியர் கூதல் அஞ்சிட,<br />மலை பிளந்தென இடிமுழங்கிட,<br />மை யிருளிடை பொய்யெனப் பெரு….<br /><br />மழை பொழிந்தது, மழை பொழிந்தது!<br />மண் மடந்தையின் மனங் கசிந்தது!<br /><br />இடரெனும் புவிக் கடலில், உண்மை யென்<br />இரவி யள்ளிய கருமுகில் மனத்<br />திடைப் புகுந் துணர் வறுத்த செந்தமிழ்<br />உடைப் பெடுத்தொரு படைப் புதித்தென<br /><br />மழை பொழிந்தது, மழை பொழிந்தது!<br />மண் மடந்தையின் மனங் கசிந்தது!<br /><br />(வழி" தொகுதியிலிருந்து...)Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-33272297.post-75929330980112004552008-08-15T21:47:00.000-07:002008-08-24T23:35:24.059-07:00மின்னல்கண்ணைத் தின்னும் மின்னல்! –<br />நெஞ்சைக்<br />கருக்கி உருக்கும் மின்னல்!<br />மண்ணை யறைந்து குதித்தே<br />பாம்பாய்<br />மடியும் நெளியும் மின்னல்!<br /><br />சளசள எனமழை<br />பொழிகிற பொழுதினில்<br />ஒழுகிற குடிசையில்<br />உழல்கிற வறியவர்…..<br /><br />கண்ணைத் தின்னும் மின்னல்<br />நெஞ்சைக்<br />கருக்கி உருக்கும் மின்னல்!<br /><br />கயமைகள், கசடுகள்<br />கதியென அலைகிற<br />கயவரை இறையவர்<br />கடிகிற நகைபுரை<br /><br />கண்ணைத் தின்னும் மின்னல்<br />நெஞ்சைக்<br />கருக்கி உருக்கும் மின்னல்!<br /><br />அருள்தவிர் கொடியவர்,<br />அடிமன இருளிடை<br />அறிவெனும் ஒருகசை<br />அடிவிழல் எனவதோ….<br /><br />கண்ணைத் தின்னும் மின்னல்<br />நெஞ்சைக்<br />கருக்கி உருக்கும் மின்னல்!<br />விண்ணில் தங்க நதியாய்ப்<br />பாய்ந்து<br />விரையும், மறையும் மின்னல்!Unknownnoreply@blogger.com0