மட்டக்களப்பு மாநகர்
இலங்கையின் திருமுகம், இலட்சியத் தமிழகம்
எழில்தவழ் மட்டு மாநகர் வாழ்க!
வளம்பல கொழிக்கும் வாவியில், மீன்கள்
முழங்கிடும் இசையும் தமிழும் வாழ்க!
விபுலா னந்தன் வழங்கிய யாழாய்
விளங்கிடும் வங்கக் கடலொடும், வாவி
நவரச ஏழிசை நரம்பெனப் பொருந்தும்!
நாளும் உதயச் செங்கதிர் வணங்கும்!....
இலங்கையின் திருமுகம்…..
வயல்களில் பொலிமலை! ஆழியில் மீன்கள்!
வளர்செழுந் தெங்கும் உதிர்வதுந் தங்கம்!
அயல்விருந் தோம்பும் அன்பினில் அன்னை!
அரைசியல் பல்கலை அறிஞர்க்கும் அம்மை!.....
இலங்கையின் திருமுகம்….
சோதிடம், மருந்து, மந்திரம், கூத்து,
சுவைக்கவி, வசந்தன் குரவையும் ஏத்தும்,
சாதிகள் நான்கும் தம்மதம் காத்து,
சமத்துவம் கண்ட தாயகம் வாழ்க!....
இலங்கையின் திருமுகம்….
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home