Monday, July 28

விடுப்பு

"வள்ளி யக்கை! வாகா,
வந்திப் படியுட்கார்
வட்டா வுக்குள் வெற்றிலை
கொண்டு வைபிள்ளை
பிள்ளை குட்டிகள் சுகமா?
கோப்பி வருமிப்போ
பின்னால் போடு வாய்க்கு,
பிறகு… புதினங்கள்?"
கள்ளப் பொன்னன் பொண்டிலை,
யாரோ கரவோடு
கதவில் வந்து தட்டிய தாகக்
கதை கேள்வி!
"வள்ளி யக்கையின் வாய்ச்சொல்
போலவை வாய்க்காதாம்!
வந்தது யாராம்? கண்டது யாராம்?
வடிவாய்ச் சொல்"

"காலம் கெட்டுப் போச்சிடி பிள்ளை…
கதிராமன்!
கணபதி யண்ணன் மகனை
உனக்குத் தெரியாதா?
காலை* யிருந்து
வீடு வரக்குட் கண்டானாம்
“கண்ணகை” கதவை திற
நான் பொன்னன் என்றானாம்
வேலைகிடக்குப் பிள்ளை
எனக்கு, வேறென்ன…?
விடியச் சாமம் தொட்டிது
மட்டும் ஒழிவில்லை.
சேலைக் கெத்தனை ரூவாய்
பெட்டை செலவாச்சு?
சிகப்புக் கரையும் முகப்பும்
நல்ல செப்ப மிது!
செத்தால், இந்த சீர்சிறை யெல்லாம்
யார்கண்டார்.
சீவன் போக முன்னர்
இதெல்லாம் செய்யாமல்.
வைத்தார், கொண்டா போய்விட் டார்
நான் வரவா போய்
வட்டிக் காசும்
முப்பது ரூவாய் வரவேணும்…."

"அத்தா னுக்குச்
சம்பளமின்னும் விழவில்லை?"

"அவசர மில்லை செலவு கிடக்கும்,
அறிவேன் நான்
குற்றம் இல்லை
வருகிற மாதம் தந்தாலும்.
கோழி, நெல்லுப் பாயில்!
அதனை ‘சூய்’ எண்ணு. "

"கோழி யிறைச்சிக்
குழம்புமிருக்குத் தயிரோடும்
கொஞ்சஞ் சோறு தின்னேன் அக்கை."

"வேணாங்கா.
கோழிக் கறியில் கிடந்தால்
எடுத்துக் கோப்பைக்குள்
கொஞ்சம் தந்தால்
பிள்ளைகளுக்குக் கொடுபோவேன்!
ஏழிது மாசம், என்னடி? பிள்ளை..
வயித்துக்குள்
ஏறும், ஊரும்,
இம்முறை ஆணே பெறுவாய் நீ!
நாளு மிருக்கு…
காசு களஞ்சுக் கஞ்சாதே
நல்லது போய்வரு கின்றேன், தங்கம்
நாளைக்கும்!"

(காலை* - தோட்டம்)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home