Friday, August 15

கதிர் பொறுக்குகின்றாள்

கதிர் பொறுக்குகின்றாள் - வயல்
காட்டிலே குனிந்து வள்ளி
கதிர் பொறுக்கு கின்றாள்!

விதிர் விதிர்க்க வெயிலில் நின்று
வினை முடிக்கு முழவர் கண்டு
சதிரெனக் களிக்க நன்று
சாய்ந்து சாய்ந்து முன் நடந்து….

கதிர் பொறுக்குகின்றாள் – வள்ளி
கதிர் பொறுக்குகின்றாள்!

புல்லறுத்து பாதமோ,
வெண் புறாவின் கால் எனச் சிவந்து,
நெல் சுமக்கு முழவர் நெஞ்சில்
நினைவு கோடி நிறைய நின்று….

கதிர் பொறுக்குகின்றாள் – வள்ளி
கதிர் பொறுக்குகின்றாள்!

சூடிரண்டையே சுமந்து
தூரெனும் இடை துவண்டு
ஆடுகின்ற தோகை கண்டு
அஞ்சி யோட அதனை வென்று…

கதிர் பொறுக்குகின்றாள் - வயல்
காட்டிலே குனிந்து வள்ளி
கதிர் பொறுக்கு கின்றாள்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home