Friday, August 15

பொன்னி வயற்புறம் போவதேன்

கன்னி எழிலொடு தன்னந் தனிமையிற்
பொன்னி வயற்புறம் போவதேன்? – எங்கள்
பொன்னி வயற்புறம் போவதேன்? – அவள்
கண்ணை இமைப்பது கண்டு குளத்திடை
காவி மலர்க்குலம் சாவதேன் - அந்தக்
காவி மலர்க்குலம் சாவதேன்!

நஞ்சை விளைப்பவன் நாட்டின் பெருந் திரு
நெஞ்சை அரிந்து துண் டாடவோ! – கொண்டு
கஞ்சி கொடுத்தபின் காற்றை மறித்தவர்
கொஞ்சி மகிழ்ந்து கொண்டாடவோ?

கன்னி…

முற்றி விளைந்த நெல் பற்றைக்கு நாணத்தை
கற்றுக் கொடுத்தபின் மீளவோ? – கரு
விற்புரு வத்தினில் அற்புதம் செய்தவன்
அன்பு மனத்தினை ஆளவோ……..?

கன்னி…

இப்படிச் சூட்டை இயற்றுக என்றிரு
செப்பு முலைகளைக் காட்டவோ! - இல்லை
“எப்படி என்முகம்?”என்றுசெந் தாமரைக்
குப்பையை அங்கிருந்தோட்டவோ….?

கன்னி…

உச்சி வெயிலினைத்துச்சமென் றெண்ணி
உழைத்த வரைப் புயம் சாயவோ? – காதல்
இச்சை எழுப்பி இதழ்கடை ஊறிய
இன்ப அமுதினை ஈயவோ…..?

கன்னி…

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home