கொஞ்ச வந்தான்
கொஞ்ச வந்தான்! குனிந்தேன்! அஞ்சிக்
கொஞ்சம் பின்வாங்கி நின்றான்
கொஞ்ச வந்தான் பிறகும் தடுத்தேன்விழி
கும்பிடவும்
கெஞ்சி நின்றான்! பணிந்தான்! நகைத்தான்
சற்று கிட்டவந்தான்
கொஞ்ச வந்தான்! குனியாது நின்றேன் அவன்
கொள்கை வென்றான்!
மீட்டுகின்றேன், நின் இதயத்து வீணையை
மெல்ல மெல்ல
கேட்டு கின்றான்! மறுத்தேன்! கடைக்
கண்களினால் கிளறி
மீட்டும் வந்தான்! எனைப் பாட்டுரைத் தான்!
அவன் மென்மையிலே
பூட்டவிழ்ந்தேன்! கரும் பூட்டிச் சென்றான்,
பின்னர்
போய்த் துயின்றேன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home