பிழையாய் நினையாதீர்
என்னைப் பிழையாய் நினையாதீர்
~எதனால்? என்பீர்,
அவசரமாய்
என்னைப்பற்றி, நானேயாய்
எடுத்துக்கூறல்... அதையுன்னி
என்னைப் பிழையாய் நினையாதீர்!
பொன்னைப்
புகழைப் பெரும்பொய்யைப்
பூவைப் பெண்ணைப் புதுநிலவைப்
பண்ணிப் படைத்து விட்டிருந்தால்....
பாவம் இவையே போதாவோ?
~உண்மை| எனவும் ஒன்றிங்கே
உலவும்!
அதனால்... அடியார்காள்!
என்னைப் பிழையாய் நினையாதீர்
- 20.3.64
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home