Monday, July 28

ஆசாரந்தெரியாத பூசாரி!

இல்லாத பேயை இருப்பதுவாய்க் கற்பித்து
வெல்லுவேன் அஃதையென விறாப்பு மார்தட்டி
மூன்று விரலால் மேல் முழுதும் திருநீறும்
நீண்டு வளர்ந்த சடாமுடியும் தாடியுமாய்
வண்டியின் சில்லளவு குங்குமப் பொட்டோடு
கண்டோர் மருளுமொரு காட்சி யுடையவனாய்
கையில் உடுக்கும் கசையும், மறுகையில்
சூக்மாந் தடியும் சுடலையிலே சீவியமும்
கக்கத்தில் மண்டை எலும்போடும் சுற்றுகிற
கோணங்கி யாரே! நீர் கூறுவதைக் கேட்டேன்நான்!

ஏனோய் இதெல்லாம் நீர் எங்குகற்றீர் என்றறிவேன்
பிச்சை எடுக்கும் ஒருவன் பிசத்திய
கச்சடா வார்த்தைகளை கண்டவற்றை காதலித்து
கட்டி எடுத்த கலவையினை மந்திரமாய்
வெட்டி விழுத்த விரைகின்றீர்!பூசாரீ!
வயிற்றை கழுவும் வழிகண்டீர்!
வாழ்த்துகிறேன்முயற்சிக்கு!
பச்சரிசி பண்டம் கிடைக்கும் பிழைத்துப்போம்…!
பிச்சை பிசத்தியதைக் காட்டிச்சுளையான
மந்திரமாய் சொல்லிச் சுடலையிலே
இல்லாத பேயை இழுத்துத் துயிலுரியும்
வல்லமையை.. எம்மிடமும் காட்ட நினைப்போ!
அவித்தை ஒரு பேய்தான் அதனிடம் சிக்கி
அவத்தை படும் நீரும்… அந்தோ.. ஒரு பேய்
நான்
பூசாரி என்று புளுகவும் செய்கின்றீர்!
ஆசாரந் தெரியாத பூசாரியே…!
அவித்தைப்பேயோட்டு முன்னர்!
வெறும்பொய் பிசத்தலைக்
காய்வெட்டிப் பின்னர் கழி!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home