Monday, July 28

விடிகிறது

நீதியைக் கோரும் மரணப் பெரும் அமைதி
நிசியின் முன் கைகட்டி..
நீதியையே வேண்டி நிற்கும்!
வஞ்சகப் பொய்யிருட்டோ..
வார்த்தை எதுவும் இன்றி..
நெஞ்சழுத்தத் தோடே
நிமிர்ந்து கொலு விருக்கும்!
நீதியையே வேண்டிநிற்கும்
மரணப் பெரும் அமைதி!

மாயாண்டி. கன்மன்..
மருகர் துணையோடும்
தூய உயிர் கோவலனைப்
பேச முடி யா மல்கழுத்தை
நசித்துக் கொலை செய்தூர்ச்
சந்தியிலே போட்டுவிட்டுப்
போத்தல் முறித்த
களியாட்டில் மெய் கிறங்கி
அரசு நடத்துகின்ற
வஞ்சகப் பொய்யிருட்டின்
வார்த்தைச் சிலம்ப மாய்..
அஞ்சாறு சேவல்கள்!
நெஞ்சம் குலுங்கும் படியாகச்
சங்கொலிக்கும்!
எக்களித்தே மூடக் குயில் கத்தும்!
காக்கைகளும் வஞ்சகத்தின்
வெற்றிக்கே வாழ்த்திசைக்கும்!
நீதியைக் கோரும்
மரணப் பெரும் அமைதி!

நீதி கிடைக்கா நெருப்பு,
நெடு மூச்சாகும்..!
மூச்சோ,கடலை
முரசம் முழக்க வைக்கும்!
போச்சுதே! என்று வஞ்சப்
பொய்மை புடைத் தவறச்
செந்தழல்!வானம்
சிவந்திடச் சினந்து
அதோ
வந்தது கண்ணகி கண்ணெனச் செந்தீ!பொய்மையைத்தூக்கிலிட்டுப்
பொசுக்கி அந்தரத் திருந்தே
அழித்துத் துடைத்தது!
ஹ..ஹா
இந்த வரையில் விடிந்ததே! வையமெலாம்
சுந்தர நீதிச் சுடர்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home