Monday, July 28

திரும்பி வருவாய்

ஒருநாள் ஞானம் உண்டாகும்
ஊரை நோக்கித் திரும்புகையில்
வருவாய், எனையும் சந்திப்பாய்!
வாழ்த்தி உனை நான் வரவேற்பேன்!
கருவம் அழியக் கண்பெறுவாய்
கைகள் கூப்பிக் கும்பிடுவாய்
அருமை மகனே அந்நாளை
ஆவலோடும் எதிர்பார்ப்பேன்!

ஒளி என்றாய் முன் ஒருபோது
உணர்ச்சி இருட்டென்றாய் பின்
வழியை விட்டு வாய்ச்சொல்லில்
வழுவி எங்கோ விழுகின்றாய்
தெளிவும் பெறுவாய் முடிவினிலே!
திரும்பி வருவாய் வரும்போதுன்
விழிகள் சொரியும் துயர்க் கவிதை
விரும்பி அதனை நுகர்வேன் நான்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home