Monday, July 28

நாய்கவனம்

நாய்கள் இரண்டு
இரண்டும் பிறத்தி!
வழிநடைப் பட்ட
வழிசல் பிறவிகள்!
ஒருநாள்…வந்தன வாசலில்,
பொறுக்கத்தான்!
பொறுக்குவது நாய்களுக்குத்
தொழிலானால்…
அதுவே கலையானால்…
பேஷாகப் பொறுக்கட்டும்!
வயிறுகள் வளரும்!
புழக்கடை புனிதமுறும்!
பொறுக்கட்டும்! பொறுக்கட்டும்!
பொறுக்குகையில்…
வீணாக ஒன்றை ஒன்று
வெறுத்து வெரூஉக் கொண்டு
கடிபிடிப் படுவானேன்?
சண்டை பிடிப்பதிலே
நாய்களுக்கு நிறைவானால்
பிடிக்கட்டும்!
நாணமற்று
உடையின்றி நடுத்தெருவில்
ஒன்றாக நிற்கட்டும்!
ஊர்திரண்டு மித்திரனைப்
பார்த்து நகைக்கட்டும்
அதற்காக…
என் வீட்டுக் குழந்தைகளின்
சங்கீத வகுப்புக்கு
இடையூறாய் நிற்பதனை அனுமதியேன்
அடிகல்லே அடிகல்லே
அசிங்கப் பிறவிகளை…

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home