Monday, July 28

துணிவும் பொறுமையும்;;

நாங்கள் வளர்க்கின்ற
நாய் பெரிய சாதியல்ல.
தாங்கள் வளர்த்த பெட்டை
நாயின் தவங்களை
எங்களின் வேலி
இடுக்கிலும் போட்டுவைத்தார்.
தங்க நிறம் மேனி!
தடித்து முறைத்த செவி!
வாலுமில்லை ஆளை
வளர்ப்போம் என வளர்த்தோம்.
நன்றாகச் சாப்பிட்டார்.
நாளும் வளர்ந்துவந்தார்.

முன்னங்கால் தூக்கி
முகம் நக்க முந்தி நிற்பார்.
அல்ஷேஷன் போல,
அழகான நாயிதென்று
எல்லோரும் சொன்னார்.
இரவில் அதன் சத்தம்,
ஊரைக்கலக்கும்!
உலுத்தும் திருடர்களை.
ஆரையும் இன்னும் கடித்ததில்லை
ஆனாலும்
ஊரார் பயந்தார்
உருவத்தைப் பார்த்தவுடன்.

அந்த நாய் தோட்டத்தில்
ஆடுவந்து மேய்கையில்
சந்தோஷமாக அதைப்
பார்த்துப் படுத்திருக்கும்!
ஆட்டைத் துரத்தி
வெளியில் அனுப்புகையில்
ஓட்டமாய் ஓடி அதை
உள்ளே மறித்து எனை
ஆட்டங்கள் காட்டும்
அதனால் பயிரழியும்.
போட்டால் ஒரு போடு
கால்தூக்கி ஓலமிடும்!
மாட்டைத் துரத்தாது,
பகிரங்கப் பாதையிலே
மோட்டார் துரத்துகின்ற
மூளை கெட்ட நாய் இதென்று,
எம்ஜீஆர் என்று
இதற்குப் பெயர்சூட்டி
எம்மடியார் போற்ற
இதைவைத்துக் கொண்டிருந்தோம்.

எவ்வளவோ உண்டு
இவர்தம் புராணங்கள்.
அவ்வளவுக் குங்களை
ஏன் நான் அறுத்துவைப்பான்.
இன்றுபகல் எங்கள்
மனைவாசல் பக்கமாய்
என்றும் வராத விருந்தார்
வந்திருக்கக் கண்டேன்.
அடி இதென்ன கஷ்டம் மறுகாலும்
கொண்டு வா கம்பென்று கூவினேன்!
வந்தவர்,
தோட்டத்துப் பக்கம்
தொடுத்தார் துவண்ட நடை.
மீட்டும் துரத்த,
விரைவாக ஓடுகின்றார்!
பீர்க்கநெற்றுப்போல எலும்பும்
நெடிதாக
பார்க்கப் பரிதாப மான எலிவாலும்
பாயில் பசியின்
பயங்கரத்தைப் பாலியத்தில்
நேருக்கு நேர்கண்ட நாய்க்குட்டி!
நீர்மையுள்ள
எங்கள் எம்ஜீஆர் அவர்கள்
எங்கிருந்தோ ஓடிவந்தார்.
எங்குவந்தாய் அற்பப்
பொடிப்பயலே என்பார் போல்,
பாய்ந்துபோய் சீறி,
படமெடுத்த வேளையிலே
காய்ந்த குட்டி நாய் திரும்பி
காரமும் சாரமுமாய்
கொம்புதல் கண்டேன்
கோபத்தை விட்டு எங்கள்
எம்ஜீஆர் நின்றார் இளித்து!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home