விளக்கு வைப்பீர்!
கள்ளன்று, கஞ்சாவூம் அபினும் அன்று
கடல்கடந்து குடிபுகுந்த சரக்கும் அன்று!
சொல்லன்று, பொய்களையே தொகுத்த தன்று
சுதி யன்று, அரசியலால் சுரந்த தன்று
கல்லன்று, மரமன்று, குரங்கும் அன்று
கணிகையன்று கழகத்தின் பைலும் அன்று
தள்ளிநிலும் பண்டிதரே கவிதைக்கென்றும்
தயிர்போலும் நெஞ்சென்ப தறியீர் பாவம்!
நெஞ்சாளம் பார்த்தீர்முன் குளித்த போதென்
நெஞ்சகலம் பார்த்தீரே! நினைவில் உண்டோ?
அஞ்சாறாந் தரப்பொடிகள் வகுப்பில், தர்க்க
அதிசயங்கள் எம்மிடத்தில் அளந்தீர்! கேட்டோம்.
பஞ்சமா பாதகங்கள் பற்றிக் கூட
பண்போடு பேசுகிறீர், பார்த்தோம் நண்பா!
கஞ்சமலர் உறைவாளே கலையின் தெய்வம்
கடைச் சரக்கென் றெண்ணிவிட்டீர் காதல் பாவம்
உன்னினைவு போல்,அவளோர் ஊத்தை ஏறி
உருக்குலைந்த சிலையன்று, ஊனும் அன்று
என்னுதிரம் செழித்தோடும் இதயத் தேவி!
எவரோஉன் போல்சிறுவர் இயம்பக்கேட்டுக்
கண்விற்றுச் சித்திரமா வாங்கப் பார்த்தீர்!
கலைவளர்க்க வேறுகதி காணீர் போலும்?
இன்னுமொரு முறை இதுபோல் கனவு கண்டால்
எரித்திடுவீர் இதயத்தில் விளக்கை வைப்பீர்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home