ஒளிவெள்ளப் பாய்ச்சலிலே
நெய்க்கலசம் நிறைந்திருக்கு
இதயவிளக் கணையாது!
ஒளிவெள்ளப் பாய்ச்சலிலே
இருளே நீ… சிறுதுரும்பு!
கல்லாலே..கொலை நடத்தி
வேடர் நிணம் புசித்தார்.
நாகரிகர் நாங்கள்
கலைக்கோயில் கட்டுகிறோம்!
வேடரா நாமோ உயர்சாதி என்பதனை
நீயா… விளம்புவது?
ஐயை…யே! என்ன அசிங்கம்!
இளம்பிறையைத் தொடர்ந்துவரும்
இருத்தையமா வாசை இருள்!
வளர்பிறையே… முழுநிலவு!
ஒளிவெள்ளப் பாய்ச்சலிலே….
இருளே நீ சிறுதுரும்பு!
எழுதியது:17.01.1965
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home