சரியான இடம் போகின்றேன்
“எங்கு போ கின்றீர்? என்றீர்
எங்கேனும் போகின்றேன்.
ஏன்
அங்கெலாம் தொடர்ந்து வந்து
அறுக்கவோ கழுத்தை?
ஓம் ஓம்
எங்கேனும் போகின்றேன் ஓய்..
இடத்தை நான் சொல்ல மாட்டேன்…
இங்குபோல் இல்லா வேறோர்
இடத்துக்கே போகின்றேன் நான்
மாதங்கள் மடிதல் இல்லா
மகிழ்வான இடமாய்,
உண்ணத்
தோதான பண்டம் யாவும்
சுத்தமாய்க் கலப்பில் லாமல்
நீதியாய் விற்கும் ஊராய்
நினைவெலாம் ஒன்றே ஆகிச்
சாதனை புரியத் தக்க
சரியான இடம் போகின்றேன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home